முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தேசங்கும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், நந்திக்கடலிலும் இன்று (18) மலர்தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
“எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம்” என ரவிகரன் தெரிவித்தார்.
