பூநகரி பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட பல்லவராஜன் மன்னனின் சிலை இன்று (05) திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று பூநகரி பிரதேச சபை செயலாளர் தயாபரன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டு பல்லவராஜ மன்னனின் சிலையை திறந்து வைத்தார்.
