மானிப்பாய் பகுதியில் வீதியில் சாகசம் காட்டிய இளைஞன் ஒருவரை விளக்கமறியலில் வைக்கமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மக்கள் நடமாட்டம் அதிகமான நேரத்தில் வீதியில் வேகமாக வாகனத்தினை செலுத்தி , சாகசம் காட்டியதுடன் , வீதியில் போத்தல் ஒன்றையும் உடைத்துள்ளார்.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞனை கைது செய்தனர்.
மேலும், கைதான இளைஞனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
