யாழ்.மாவட்டத்தில் போதைப் பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலுக்கு அமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் நேற்று 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன், உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான பொலிஸ் அணியினரால் 15ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வியங்காடு, கோப்பாய், யாழ்ப்பாணம், நல்லூர் பகுதிகளை சேர்ந்த 20 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
