தந்தையின் களைப்பை தீர்க்க இளநீர் பிடுங்குவதற்கு தென்னை மரத்தில் ஏறிய 21 வயதுடைய இளைஞன் தவறி விழ்ந்து பலியான சம்பவமொன்று நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி தந்தையும் மகனும் மட்டக்களப்பு – சித்தாண்டியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்றபோது தந்தைக்கு உடற்சோர்வுடன், களைப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தந்தையின் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளநீர் பிடுங்குவதற்கு மகன் ஏறியநிலையில் தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்து
உணர்விழந்துள்ளார்.
உடனடியாக மாவடிவேம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
