முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு றெட்பானா மாணிக்கபுரம் பகுதியில், தாயை தாக்கிவிட்டு மகன் தூக்கில் தொங்கி உயிர்மாய்த்த சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதுடைய கணேசன் கேதீஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
10 வருடங்களுக்கு முன்னர் மனைவியைப் பிரிந்து, தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். சகோதரி தொழில் நிமிர்த்தம் கொழும்பில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் தாயாருடன் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து தாயைத் தாக்கியுள்ளார். இதனால் தாயார் அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.
கொழும்பிலிருந்து மகள் நேற்று அதிகாலை விடுமுறையில் வந்து இருவரும் வீட்டிற்குச் சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் காணப்பட்டது.
