இந்தியா – சென்னையில் இருந்து நூறு பயணிகளுடன் முதலாவது கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்தது.
கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் பாலடி சில்வா அடங்கிய குழுவினர் கப்பலை வரவேற்றனர்.
சென்னை துறைமுகத்தில் இருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைத்தந்த குறித்த கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்குச் சென்று பின்னர், காங்கேசன் துறை துறைமுகம் சென்று திரும்பும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
