நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைக்கு முன்னர் நோயாளர்களுக்கு மயக்கமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் மயக்க வாயுக்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மயக்க வாயுக்கள் தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
